tamilni 308 scaled
இலங்கைசெய்திகள்

24 மணித்தியாலங்களில் பொலிஸாரிடம் சிக்கிய ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

Share

24 மணித்தியாலங்களில் பொலிஸாரிடம் சிக்கிய ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் போதைபொருள் கடத்தல் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட பொலிஸாரின் விசேட நடவடிக்கைகளின் போது 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 2 கிலோ 232 கிராம் ஹெரோயின், 178 கிலோ கஞ்சா, 769 கிராம் ஐஸ் போதைப்பொருள், 35 கிலோ (Ash), 626 கிராம் மாவா, 30,550 கஞ்சா செடிகள் மற்றும் 3,489 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 2,121 சந்தேகநபர்களில், 12 சந்தேக நபர்கள் தடுப்பு உத்தரவுகளின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அவர்களில் 116 பேர் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் IRC பட்டியலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 5 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 133 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் நேற்றையதினம் (17.12.2023) அதிகாலை 4 மணியளவில் நாடளாவிய ரீதியில் இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

ஒன்பது மாகாணங்களுக்கும் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இந்த விரிவான நடவடிக்கையை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...