tamilni 307 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் அணிந்துள்ள புதிய முகமூடி!

Share

விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் அணிந்துள்ள புதிய முகமூடி!

எம்மை கஷ்டத்தில் தள்ளிய ஆட்சியாளர்கள், தற்போது புதிதாக முகமூடி அணிந்து கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் மாநாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,”கடந்த வருடம் மே, ஜூன் காலப்பகுதியில் விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் குறிப்பாக கொழும்பில் இருந்த மகிந்த ராஜபக்ச எங்கு சென்று மறைந்தார்? திருகோணமலை முகாமில் மறைந்திருந்தார்.

கொழும்பிலிருந்த பசில் மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்தார். கொழும்பிலிருந்து நாமல், தந்தையுடன் முகாமிற்கு சென்றார். கோட்டாபய மாலைத்தீவில் இருந்தார். பின்னர் சிங்கபூருக்கு சென்றார். இவை அனைத்தும் நினைவிருக்கிறதா?

ஆனால் தற்போது மாநாடு ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் தலைவராக மீண்டும் மகிந்தவை தெரிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் வருகிறார்கள். ஏன் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவா? மக்கள் அவர்களுக்கு அதிகாரத்தை கொடுப்பார்களா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

எம்மை கஷ்டத்தில் தள்ளிய ஆட்சியாளர்கள் தற்போது புதிதாக முகமூடி அணிந்து கொண்டு மீண்டும் வருவதற்கு முயற்சிக்கின்றனர். காட்டுச்சட்டமே நாட்டில் உள்ளது. குற்றவாளிகளே ஆட்சியில் உள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ஆகிய இரண்டு தரப்பினரும் முன்னர் ஒருவருக்கு ஒருவர் போரிடும் எதிரிகளாக தெரிந்தார்கள். தற்போது அவர்கள் இருவரும் ஒரே அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.

மகிந்த, கோட்டாபய, பசில், அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட பலர் குற்றவாளிகள். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூட குற்றவாளி. நீதிமன்றத்தில் அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறான ஆட்சியாளர்களின் இருப்பதை நினைத்து நாட்டு மக்கள் வெட்கப்பட வேண்டும்.”என கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...