சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான்
உலகம்செய்திகள்

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

Share

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில் தமிழர் எழுச்சி கட்சி சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசிய நியூட்டிரினோ திட்டம், 8 வழிச்சாலை, மணிப்பூர், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் சூழல் போன்ற கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது.

அத்துடன் இணையத்திலும் அவர் பேசிய வீடியோ வைரலானது. அதன் பின்னர் சீமான் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக தரமணி பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சீமான் மனுதாக்கல் செய்தார்.

ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. இந்த நிலையில் சீமான் தாக்கல் செய்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு நீதிபதி இடைக்கால தடை விதித்தார். அத்துடன் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கும் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

நாம் தமிழர் சீமான் பொதுக் கூட்டங்களில் ஆவேசமாக பேசுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதால், பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...