tamilni 225 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்தவரை காப்பாற்றிய இளைஞர்கள்

Share

தென்னிலங்கையில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்தவரை காப்பாற்றிய இளைஞர்கள்

களுத்துறை, வஸ்கடுவ இளைஞர்கள் குழுவொன்று லொறியில் மோதியதன் பின்னர் வேனில் சிக்கிய நபரை மீட்டு உயிரை காப்பாற்றியுள்ளனர்.

30 நிமிட நடவடிக்கையில் இரும்புச் சங்கிலிகள் மற்றும் பல பொருட்களை பயன்படுத்தி பாரிய முயற்சியின் பின்னர் குறித்த இளைஞனின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறிய லொறி, வஸ்கடுவ பகுதியில் வைத்து அதிவேகமாக பின்னால் வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். பெரும் சத்தத்துடன் இந்த விபத்து நடந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் குழு ஒன்று உடனடியாக அங்கு வந்து சிக்கிய நபரின் உயிரை காப்பாற்ற போராடியுள்ளனர்.

அதற்கமைய, 30 நிமிட நடவடிக்கையில் அந்த நபர் மீட்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில், 1990 அம்பியுலன்ஸ் சேவையும் அந்தப் பகுதியை வந்தடைந்த நிலையில், அவர்களின் அறிவுறுத்தல்களின்படி மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர்.

அதற்குள் இளைஞர்கள் காயமடைந்த நபரை மீட்டு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...