rtjyd 1 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Share

இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் இந்நாட்களில் டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, பல்வேறு சுவாச நோய்கள் மற்றும் காய்ச்சல் வைரஸ்கள் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பரவி வரும் சில சுவாச நோய் வைரஸ்களினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமும் ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும், இருமலுடன் கூடிய டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் காணப்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மருத்துவர் ஆஷா சமரநாயக்க, டெங்கு நோயாளர்களுக்கு சிறிதளவு இருமல், தொண்டையில் அசௌகரியம், சில சமயங்களில் மூக்கில் சளியுடன் கூடிய அசௌகரியம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கின்றார்.

இதன் காரணமாக சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு டெங்குவும் இருக்கலாம் என மருத்துவர் ஆஷா சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நோய்களில் கவனம் செலுத்தாததால், பலரது குடும்பத்தினர் அனைவரும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவருக்கு மூன்று நாட்களாக அதிக காய்ச்சல் இருந்தால், உடனடியாக முழு இரத்த எண்ணிக்கை மற்றும் NS1 ஆன்டிஜென் இரத்த பரிசோதனை செய்து நோயை கண்டறிய வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...