rtjy 57 scaled
இலங்கைசெய்திகள்

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் உறுப்பு நாடாக இலங்கை

Share

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் உறுப்பு நாடாக இலங்கை

உலகின் மிகப்பெரிய கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் 39வது உறுப்பு நாடாக இணைந்துள்ள இலங்கையை ஒன்றிணைந்த கடல்சார் படைகள் வரவேற்றுள்ளன.

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் ஒரு பகுதியாக இலங்கை இருப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் தளபதி வைஸ் அட்மி பிராட் கூப்பர் கூறியுள்ளார்.

மேலும், உலகின் மிக முக்கியமான நீர்வழிகள் சிலவற்றைப் பாதுகாக்கும் மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் சர்வதேச கடற்படைக் கூட்டிற்கு இலங்கையை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவுடன் இணைவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட நாட்டின் கடற்படைத் தளபதி வைஸ் அட்எம்.பிரியந்த பெரேரா, சர்வதேச பாதுகாப்பு கூட்டுறவு மற்றும் பிற பங்காளி நாடுகளுடன் கூட்டுப் பயிற்சிகள், கண்காணிப்புகள் மற்றும் நடவடிக்கைகளில் ஒத்துழைக்க இலங்கை ஆர்வமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவானது பயங்கரவாதத்தை தோற்கடிப்பது, கடற்கொள்ளையைத் தடுப்பது, பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பான கடல்சார் சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

அத்துடன் உலகின் மிக முக்கியமான சில கப்பல் பாதைகளை உள்ளடக்கிய 3.2 மில்லியன் சதுர மைல் நீர் முழுவதும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஆதரிப்பதன் மூலம் கடற்படை கூட்டாண்மை சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை நிலைநிறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...