rtjy 57 scaled
இலங்கைசெய்திகள்

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் உறுப்பு நாடாக இலங்கை

Share

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் உறுப்பு நாடாக இலங்கை

உலகின் மிகப்பெரிய கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் 39வது உறுப்பு நாடாக இணைந்துள்ள இலங்கையை ஒன்றிணைந்த கடல்சார் படைகள் வரவேற்றுள்ளன.

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் ஒரு பகுதியாக இலங்கை இருப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் தளபதி வைஸ் அட்மி பிராட் கூப்பர் கூறியுள்ளார்.

மேலும், உலகின் மிக முக்கியமான நீர்வழிகள் சிலவற்றைப் பாதுகாக்கும் மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் சர்வதேச கடற்படைக் கூட்டிற்கு இலங்கையை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவுடன் இணைவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட நாட்டின் கடற்படைத் தளபதி வைஸ் அட்எம்.பிரியந்த பெரேரா, சர்வதேச பாதுகாப்பு கூட்டுறவு மற்றும் பிற பங்காளி நாடுகளுடன் கூட்டுப் பயிற்சிகள், கண்காணிப்புகள் மற்றும் நடவடிக்கைகளில் ஒத்துழைக்க இலங்கை ஆர்வமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவானது பயங்கரவாதத்தை தோற்கடிப்பது, கடற்கொள்ளையைத் தடுப்பது, பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பான கடல்சார் சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

அத்துடன் உலகின் மிக முக்கியமான சில கப்பல் பாதைகளை உள்ளடக்கிய 3.2 மில்லியன் சதுர மைல் நீர் முழுவதும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஆதரிப்பதன் மூலம் கடற்படை கூட்டாண்மை சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை நிலைநிறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...