rtjy 43 scaled
இலங்கைசெய்திகள்

நேர்காணலின் போது கோபமடைந்த ஹரின் பெர்னாண்டோ

Share

நேர்காணலின் போது கோபமடைந்த ஹரின் பெர்னாண்டோ

புதிதாக நியமிக்கப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தொலைக்காட்சி நேரலை நேர்காணலின் போது ஆத்திரமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர்காணலின் தொகுப்பாளர் தனது கேள்விகளை முன்வைத்த விதத்தை ஆட்சேபித்த பின்னர் அமைச்சர் வெளிநடப்பு செய்யப்போவதாக அச்சுறுத்தினார்.

தொகுப்பாளர் குண்டர்களைப் போல் சில கேள்விகளை முன்வைப்பதாக அமைச்சர் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கட் தொடர்பான தனது திட்டங்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டதாக அமைச்சர் தொகுப்பாளரிடம் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தொடர்பாக அமைச்சர் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்ததாக தொகுப்பாளர் குற்றம் சாட்டியபோதே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஆட்சேபம் தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில், அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவும், அறிவிப்பாளர் கேட்கும் பதில்களை வழங்கத் தயாராக இல்லை என்று கூறிவிட்டு வெளியேறப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...