இலங்கையில் 54 பகுதிகள் டெங்கு நோய் பரவும் வலயங்களாக அடையாளம்!
டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள 54 பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.
இதற்கமைய, மேல் மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், 36,076 வழக்குகள் பதிவாகியுள்ளன.
அத்துடன், கடந்த நான்கு மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 7,995 ஆக அதிகரித்துள்ளது.
இது நவம்பர் மாதத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் டெங்கு நோாயால் 46 இறப்புகள் பதிவாகியுள்ளன.