2 13 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு சென்ற ஜிம் லுவாண்டா கப்பல் கடத்தல்: செங்கடலில் அத்துமீறும் ஹவுதி படையினர்

Share

இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு சென்ற ஜிம் லுவாண்டா கப்பல் கடத்தல்: செங்கடலில் அத்துமீறும் ஹவுதி படையினர்

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை மீண்டும் சீனாவுக்கு பயணம் செய்த ஜிம் லுவாண்டா என்ற கப்பலை கடத்தியுள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்து ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை செங்கடல் பகுதியில் வைத்து சிறைப்பிடித்தனர்.

மேலும் இரு தினங்களுக்கு முன்பு செங்கடல் பகுதிக்கு ரோந்துக்கு சென்ற அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஆளில்லாத ட்ரோன் தாக்குதலை ஹவுதி படையினர் முன்னெடுத்தனர்.

ஆனால் அமெரிக்க கடற்படை துரிதமாக செயல்பட்டு அத்தனை தாக்குதலுக்கு களமிறக்கப்பட்ட அனைத்து ட்ரோன்களையும் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர்.

கடத்தல் இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு செங்கடல் வழியாக பயணம் செய்த ஜிம் லுவாண்டா கொள்கலன் கப்பலை ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை கடத்தியுள்ளது.

இதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான கடல் வழி முற்றுகையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முன்னெடுக்கின்றனர் என்பது தெளிவாக தெரியவருகிறது.

ஹவுதி படையினரால் கடந்த 3 நாட்களில் கடத்தப்பட்ட அல்லது தாக்கப்பட்ட இஸ்ரேலுடன் தொடர்புடைய 3வது கப்பல் இதுவாகும்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...