rtjy 229 scaled
இலங்கைசெய்திகள்

காய்ச்சல் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

Share

காய்ச்சல் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நாட்களில் பதிவாகும் சளியுடன் கூடிய காய்ச்சல் மற்றும் சுவாச நோய் கோவிட்-19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சீனாவில் உள்ள குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் நிமோனியா குறித்து பல நிபுணர் குழுக்கள் ஏற்கனவே விசாரணைகளை தொடங்கியுள்ளன.

இந்த சுவாச நோய் குழந்தைகளிடையே அதிகளவில் பரவி வருவதாகவும், வேகமாக பரவி வருவதால் நோய் தீவிரமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, குளிர்காலம் வருவதால், நோயாளியின் நிலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

குளிர்காலம் தொடங்கியவுடன் பரவும் இதுபோன்ற அடையாளம் தெரியாத வைரஸ்களால் நாடு முழுவதும் தொற்றுநோய் நிலைமைகள் உருவாகுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

எனவே, பல நிபுணர் குழுக்கள் இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சீன சுகாதார திணைக்களம் இது தொடர்பான விரிவான தரவுகளை கோரியுள்ளதாகவும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் சளி மற்றும் காய்ச்சல் சுவாச நோய் பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் எனவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாடசாலை, பயிற்சி வகுப்புகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோர்களிடம் குழந்தை நல மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....

esterrrr
இலங்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – குற்றவாளிகளை பாதுகாத்த நீதவான்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. சுரேஷ் சலே...

Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...