rtjy 229 scaled
இலங்கைசெய்திகள்

காய்ச்சல் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

Share

காய்ச்சல் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நாட்களில் பதிவாகும் சளியுடன் கூடிய காய்ச்சல் மற்றும் சுவாச நோய் கோவிட்-19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சீனாவில் உள்ள குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் நிமோனியா குறித்து பல நிபுணர் குழுக்கள் ஏற்கனவே விசாரணைகளை தொடங்கியுள்ளன.

இந்த சுவாச நோய் குழந்தைகளிடையே அதிகளவில் பரவி வருவதாகவும், வேகமாக பரவி வருவதால் நோய் தீவிரமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, குளிர்காலம் வருவதால், நோயாளியின் நிலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

குளிர்காலம் தொடங்கியவுடன் பரவும் இதுபோன்ற அடையாளம் தெரியாத வைரஸ்களால் நாடு முழுவதும் தொற்றுநோய் நிலைமைகள் உருவாகுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

எனவே, பல நிபுணர் குழுக்கள் இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சீன சுகாதார திணைக்களம் இது தொடர்பான விரிவான தரவுகளை கோரியுள்ளதாகவும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் சளி மற்றும் காய்ச்சல் சுவாச நோய் பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் எனவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாடசாலை, பயிற்சி வகுப்புகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோர்களிடம் குழந்தை நல மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...