rtjy 227 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

மகிந்தவை மகிழ்ச்சிப்படுத்த நாமலின் நடவடிக்கை

Share

மகிந்தவை மகிழ்ச்சிப்படுத்த நாமலின் நடவடிக்கை

மாலைதீவு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொலைபேசி ஊடாக உரையாடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மாலைத்தீவுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த ஜனாதிபதி ரணில், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வாழ்த்துகள் முடிந்ததும் நாமல் ராஜபக்சவிடமிருந்து ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சர்ப்ரைஸ் விருந்து ஒன்றை தயார் செய்துள்ளதாகவும் அதில் பங்கேற்க முடிந்தால் தந்தை மகிழ்ச்சி அடைவார் என நாமல் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜனாதிபதி ரணில், தனது பாதையை மாற்றிக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் விஜேராம இல்லத்திற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி ரணில் வீட்டுக்குச் சென்ற போது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குழுவினரும் அங்கு கூடியிருந்தனர்.

அவர்கள் அனைவருடனும் பிறந்தநாள் வாழ்த்துக்களில் கலந்து கொண்ட ரணில், மாலைதீவில் இருந்து வெளிநாட்டவர் ஒருவர் நிகழ்வுக்கு வந்திருப்பதாகக் கூறி அங்கிருந்து சிறிது நேரத்திலேயே வெளியேறியுள்ளார்.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....