rtjy 224 scaled
இலங்கைசெய்திகள்

உயர்தர மாணவர்களுக்கு புதிய திட்டம்

Share

உயர்தர மாணவர்களுக்கு புதிய திட்டம்

கல்விப் பொதுத் தராதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பல தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவனம், தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் திறந்த பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இந்தப் பாடநெறிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

குறிப்பாக அடுத்த உயர்தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் இந்த பாடநெறிக்கான விண்ணப்பங்களை உடனடியாக கோரத் தொடங்கவுள்ளதாகவும், ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக தங்களுக்கு விருப்பமான இரண்டு தொழில்நுட்ப பாடங்களைத் தெரிவு செய்து இந்தப் பாடநெறியைத் தொடரலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயர்தரப் பெறுபேறுகளை பெறும் வரை 4 மாதங்கள் இந்தப் பாடத்திட்டத்தை மாணவர்கள் கற்க முடியும் என்றும், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்கள் தவிர எஞ்சிய மாணவர்களுக்கு பரீட்சை நடத்தப்பட்டு பொருத்தமான பாடநெறிகளுக்குத் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு ஏற்ற தொழிற்கல்வி கற்கை நெறியை கற்கும் வாய்ப்பும், குறைந்த வருமானம் பெறும் பிள்ளைகளும் இப்பாடநெறியை கற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...