rtjy 220 scaled
இலங்கைசெய்திகள்

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடிய பொலிஸாருக்கு ஏமாற்றம்

Share

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடிய பொலிஸாருக்கு ஏமாற்றம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவ தளபாடங்களை இரண்டு நாட்களாக தேடிய பொலிஸாருக்கு எதுவும் கிடைக்காத நிலையில் குறித்த பகுதியினை மூடிவிடுமாறு நீதிபதி அறிவித்துள்ளார்.

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் (23.11.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொலிஸ் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தை தோண்டுவதற்கு நீதிமன்றத்தில் கடந்த (19-11-2023) அன்று வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து நீதிபதியின் அனுமதியுடன் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கிராம சேவையாளர் பிரதேச செயலக உத்தியோகத்தர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் தடையவியல் பொலிஸார் திணைக்களம் இராணுவத்தினர் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதியில் சுமார் பத்து அடி ஆழம்வரை தோண்டப்பட்ட போதும் எந்த வித தடயங்களும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இரண்டாம் நாளிலும் பாரிய கனரக இயந்திரம் கொண்டுவரப்பட்டு குழி தோண்டப்பட்டபோதும் எந்தவிதமாக முன்னேற்றங்களும் இல்லை என குறிப்பிடப்படுகிறது.

கடந்த மாதமும் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தங்கங்களை தேடி பாரியளவில் தோண்டப்பட்டபோதும் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...