tamilni 381 scaled
இலங்கைசெய்திகள்

மருத்துவர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் தகவல்

Share

மருத்துவர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் தகவல்

இலங்கையில் மருத்துவர்கள் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் வைத்தியர் பாலித மஹிபால இதனை தெரிவித்துள்ளார்.

கல்வி உயர்கல்வி மற்றும் வேறும் காரணங்களுக்காக இலங்கை மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயரும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கற்கை நெறிகளுக்காக அல்லது வேறு தேவைகளுக்காக செல்லும் மருத்துவர்கள் நாடு திரும்பாதிருக்கும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு மருத்துவ பயிற்சிகளுக்காக சென்ற மருத்துவர்கள் பயிற்சி முடித்துக் கொண்டு நாடு திரும்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கு மருத்துவர்கள் செல்வதனை மேலும் குறைத்துக் கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினாலும் வரி அறவீட்டு கொள்கைகளினாலும் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் நாட்டை வெளியேறி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...