tamilni 376 scaled
இலங்கைசெய்திகள்

பொலித்தீனுடன் உணவை உண்ணுமாறு பணித்த அதிபர்

Share

பொலித்தீனுடன் உணவை உண்ணுமாறு பணித்த அதிபர்

இலங்கையில் மதிய உணவை பொலித்தீனில் சுற்றி வைத்து உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்தியதாக கூறப்படும் ரம்புக்பிட்டி மத்திய மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23.11.2023) விசேட அறிக்கையொன்றை முன்வைத்த போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று பாடசாலை மாணவர்களுக்கு சுற்றப்பட்ட மதிய உணவு தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை கட்டாயமாக உண்ணுமாறு அதிபர் பணித்ததான செய்தி வெளியாகியது.

இந்த நிலையில் நேற்று கல்வி அமைச்சர் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரை அழைத்து இது குறித்து மேலதிக விபரங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் 11ம் தர மாணவர்கள் குழுவொன்று மதிய உணவை பொலித்தீனில் சுற்றப்பட்டு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாடசாலை பொலித்தீன் அற்ற வலயமாக பராமரிக்கப்படுவதால், மதிய உணவு தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை உண்ணுமாறு மாணவர்களை அதிபர் வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பான சம்பவத்திற்கு முகங்கொடுத்த இரண்டு பாடசாலை மாணவர்கள் நேற்று காலை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்ததாகவும் கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஏனைய ஐந்து மாணவர்களும் நேற்று பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாகவும், இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாருக்கும் நேற்று முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பஸ்பாவின் பிரதேச கல்விப் பணிப்பாளரினால் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விசாரணையின் வசதிக்காக சம்பந்தப்பட்ட அதிபரை இடமாற்றம் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...