tamilni 326 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்கவில் பயணிகள் முனையத்திற்கான புதிய பாதை

Share

கட்டுநாயக்கவில் பயணிகள் முனையத்திற்கான புதிய பாதை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்திற்கான புதிய பாதை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான பிரத்தியேக அணுகல் பாதை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த வீதி அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க மற்றும் வெயங்கொட வீதி விரிவாக்கம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பாதை விமான நிலைய பயனாளர்களுக்கு சுமூகமான செயற்பாடு மற்றும் வீதி அணுகல் முறையை மேம்படுத்தும். கடந்த நான்கு மாதங்களாக இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில் அதுவரை மாற்று வீதியை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம் நன்றியை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...