rtjy 169 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஆபத்தான இருவர் தப்பியோட்டம்

Share

இலங்கையில் ஆபத்தான இருவர் தப்பியோட்டம்

இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமாவை காலி நகர மையத்தில் வைத்து சுட்டுக் கொன்ற சுஜீ கொஸ்கொடவின் உதவியாளர்கள் இருவரும் இரகசியமாக வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டி. வி. சானக்கவின் மாமனாரை கொன்ற பின்னர் கொஸ்கொட சுஜி துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரையும் டுபாய் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

காலி நகரின் பிரபல வர்த்தகரான 60 வயதான லலித் வசந்த, இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், காலி பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும், சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

விசாரணைகளின் போது, ​​கொல்லப்பட்ட லலித் வசந்த, ரத்கம விதுர என்ற பாதாள உலகத் தலைவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணமெனவும் தெரியவந்துள்ளது.

காலி நகரில் உள்ள தனது ஆடை கடையில் பணியை முடித்துக் கொண்டு காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இரு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் லலித் வசந்தவை டி56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Share
தொடர்புடையது
chemmani 22
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வியிட்ட ஐரோப்பிய தூதுக்குழுவினர்.

இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய...

dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...