rtjy 169 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஆபத்தான இருவர் தப்பியோட்டம்

Share

இலங்கையில் ஆபத்தான இருவர் தப்பியோட்டம்

இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமாவை காலி நகர மையத்தில் வைத்து சுட்டுக் கொன்ற சுஜீ கொஸ்கொடவின் உதவியாளர்கள் இருவரும் இரகசியமாக வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டி. வி. சானக்கவின் மாமனாரை கொன்ற பின்னர் கொஸ்கொட சுஜி துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரையும் டுபாய் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

காலி நகரின் பிரபல வர்த்தகரான 60 வயதான லலித் வசந்த, இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், காலி பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும், சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

விசாரணைகளின் போது, ​​கொல்லப்பட்ட லலித் வசந்த, ரத்கம விதுர என்ற பாதாள உலகத் தலைவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணமெனவும் தெரியவந்துள்ளது.

காலி நகரில் உள்ள தனது ஆடை கடையில் பணியை முடித்துக் கொண்டு காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இரு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் லலித் வசந்தவை டி56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...