manar boy 5656
இலங்கைசெய்திகள்

திருட்டுக் குற்றச்சாட்டு – தூக்கில் தொங்கியபடி சிறுவன் சடலமாக மீட்பு!

Share

மன்னார் மாந்தை மேற்கு இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தூக்கிட்ட நிலையில், அவரது வீட்டிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இலுப்பைக்கடவை கள்ளியடி பகுதியில் வசித்து வரும் வவுனியாவைச் சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது–14) என்ற சிறுவனே இவ்வாறு நேற்றுமுன்தினம் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவன் கள்ளியடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் திருடினான் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அரிசி ஆலை உரிமையாளரின் மகன் மற்றும் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் மகனை நித்திரையாக்கிவிட்டு தாயார் குளிக்க சென்ற நிலையில் தாக்கியவர்கள் மீண்டும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்த தாய் ஓடி வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தான் என தாயார் தெரிவித்துள்ளார்.

இது தற்கொலை இல்லை எனவும் மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு விவரம் தெரியாதவன் இல்லை எனவும் அவனது தாய் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...