3 3 scaled
உலகம்செய்திகள்

காசாவில் மனித சடலங்களை நாய்கள் உண்ணும் கவலைக்கிடமான நிலை

Share

காசாவில் மனித சடலங்களை நாய்கள் உண்ணும் கவலைக்கிடமான நிலை

காசாவின் அல்-ஷிஃபா வைத்தியசாலை தற்போது மயானமாக மாறியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கிடையில் தொடர்ந்து வரும் போரில் உயிரிழந்த பலரின் சடலங்கள் இன்னும் குறித்த வைத்தியசாலையில் இருப்பதாக ஸ்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளாந்தம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அல்-ஷிஃபா வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான போரில் காயமடைந்த சுமார் 600 பேர் தற்போது அல்-ஷிஃபா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் பலர் வைத்தியசாலையில் இடமின்றி நடைபாதைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிறிஸ்டியன் லிண்ட்மியர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலையில் உள்ள சடலங்களின் இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள இதுவரை இஸ்ரேல் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், சடலங்களை நாய்கள் உண்ணும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளது

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...