1 1 4 scaled
உலகம்செய்திகள்

பாலஸ்தீனக் கொடியுடன் எவரும்… பூமியில் வாழ தகுதியற்றவர்கள்: மிரட்டல் விடுத்த அமைச்சர்

Share

பாலஸ்தீனக் கொடியை ஏந்தும் எவரும் பூமியில் இனி வாழ தகுதியற்றவர்கள் என இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய அமைச்சரான Amichai Eliyahu தீவிர யூத கோட்பாடுகளை பின்பற்றும் Otzma Yehudit கட்சியின் உறுப்பினராவார். இவரே வட பகுதியை மொத்தமாக அழிக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், எவரொருவர் பாலஸ்தீனம் அல்லது ஹமாஸ் கொடியை ஏந்துகிறார்களோ அவர்கள் பூமியில் வாழத் தகுதியற்றவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதை கடுமையாக எதிர்த்துள்ள அவர்,

நாஜிகளுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். மட்டுமின்றி, ஹமாஸ் படைகளுடன் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் என எவரும் காஸா பகுதியில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காஸா பகுதியில் இருந்து இனி பிரச்சனைகள் எழாமல் இருக்க ஒரே தீர்வு, அப்பகுதியில் அணுகுண்டு வீசுவதே எனவும் அமைச்சர் Amichai Eliyahu கருத்து தெரிவித்திருந்தார்.

இவரது கருத்துக்கு உலக நாடுகள் பல கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இவர் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்டது. மேலும், காஸா பகுதியில் இஸ்ரேல் மக்களை குடியமர்த்துவதை ஆதரித்துள்ள இவர், சட்டவிரோத குடியமர்த்தலையும் ஊக்குவித்தார்.

பாலஸ்தீன மக்கள் இங்கிருந்து ஏதேனும் பாலைவனத்திற்கோ அல்லது அயர்லாந்துக்கோ செல்லட்டும், காஸாவில் குடியிருக்கும் காட்டுமிராண்டிகள் தாங்களாகவே தீர்வு காண வேண்டும் எனவும் எனவும் கொந்தளித்துள்ளார்.

ஆனால், ஹமாஸ் படைகளுக்கு எதிரான தற்போதைய போர் தொடர்பில் முடிவுகள் எடுக்கும் அமைச்சர்கள் குழுவில் Amichai Eliyahu இடம்பெறவில்லை என்றே கூறப்படுகிறது.

பாலஸ்தீன தேசியக் கொடி ஏந்தியவர்களை கொல்ல வேண்டும் என மறைமுகமாக வலியுறுத்திய அமைச்சர் Amichai Eliyahu-வின் கருத்துக்கு கடும் கண்டனம் மற்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...