rtjy 95 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு

Share

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி, தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள் மற்றும் நீதிபதிகளை குறிப்பிடுவது, போன்ற செயல்கள், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்காலக் குழுவொன்றை நியமிப்பது மற்றும் நீதிபதியின்; உத்தரவு தொடர்பில்,அமைச்சரவை அமைச்சர் ஒருவர் செய்த குற்றச்சாட்டுகளால் தமது சங்கம் கவலையடைந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவினால், சிறிலங்கா கிரிக்கட் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு, நலன்களுக்கு எதிரானது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் நீதித்துறையின் சுதந்திரம் என்பது சட்டத்தின் ஆட்சியின் அடிப்படைக் கோட்பாடாகும்.

இந்தநிலையில், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை விசாரிக்க சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்றவர்கள்; நியமிக்கப்பட வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் கருதுகிறது.

இந்தநிலையில் நீதித்துறையின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், அது நீதித்துறை அமைப்பின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். அத்துடன் நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தையும் நீதி அமைப்பின் ஒருமைப்பாட்டையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

எனினும், நீதித்துறைக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டும் உண்மைக்குப் புறம்பானது எனக் கண்டறியப்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட தண்டனைத் தடைகள் விதிக்கப்படும் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...