tamilni 90 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியல் தொடர்பில் சந்திரிக்காவின் அதிரடி நடவடிக்கை

Share

அரசியல் தொடர்பில் சந்திரிக்காவின் அதிரடி நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்காலத்தில் பலம் வாய்ந்த சக்தியுடன் இணைந்து செயற்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் அக்மீமன தொகுதியின் பிரதம அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விஜயபால ஹெட்டியாராச்சி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஆதரவளித்தால் மக்கள் சக்தியும் அதற்கு ஆதரவளிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எதிர்காலத்தில் ஒரு சக்தி வாய்ந்த கட்சியுடன் இணைந்து அந்த சக்தியை பலப்படுத்த பாடுபடுவார்.

சந்திரிக்கா தனது குடும்பத்தை ராஜபக்ச குடும்பத்தைப் போன்று ஊழல் மோசடியாக மாற்றவில்லை. சந்திரிக்கா அரசியலுக்கு வருவதை நாங்கள் விரும்புகிறோம்.

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மக்கள் சக்தி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்க விரும்புகின்றது.

சந்திரிக்கா மைத்திரிபாலவுடன் அல்லது அரச கட்சிகளுடன் இணைந்து அரசியல் செய்வார் என்று நாங்கள் நம்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
07 5
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு வான்பரப்பு மூடல்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 12 விமான சேவைகளை ரத்து செய்தது!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன்...

06 4
செய்திகள்உலகம்

ஈரான் எல்லையில் அதிரடி: ஊடுருவல் முயற்சியைத் தடுத்ததாக IRGC அறிவிப்பு!

ஈரானின் மேற்கு எல்லைப் பகுதியினூடாக ஊடுருவித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த பிரிவினைவாதக் குழுக்கள் மீது, ஈரான்...

05 4
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு பதற்றம்: அவுஸ்திரேலியா தனது இராணுவ விமானங்களை அனுப்பி வைத்தது!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா தனது...

04 4
செய்திகள்இலங்கை

உணவுப் பொதிகளில் கடத்தப்பட்ட 53.6 கோடி போதைப்பொருள்: மலேசியாவிலிருந்து வந்த பார்சல்கள் சிக்கின!

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட சுமார் 536 மில்லியன் ரூபா (53.6...