tamilni 80 scaled
இலங்கைசெய்திகள்

சட்டங்களை மீறி செயற்படுவதற்கு துணிய வேண்டும்

Share

சட்டங்களை மீறி செயற்படுவதற்கு துணிய வேண்டும்

மக்களாணை இல்லாத அரசு மக்களை முடக்கும் வகையிலான சட்டங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், மக்கள் ஆர்ப்பாட்டங்கள் ஊடாக அரசாங்கத்தின் குறித்த முயற்சிகளை முறியடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“வேண்டாம் வாயை மூடும் சட்டங்கள்” எனும் தொனிப்பொருளில் நேற்று (6)நடைபெற்ற மக்கள் கருத்தரங்கில் உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டங்கள் ஊடாக நாட்டில் மாற்றமொன்று ஏற்பட்டதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இந்த மாற்றத்தை முழுமையடைய விடாது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் அடக்குமுறை சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சித்தாலும், குறித்த சட்டங்கள் இல்லாமல் ஏற்னவே நடைமுறையில் உள்ள சட்டங்களை கொண்டு அவர்களால் மக்களை அடக்க முடியுமென சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...