rtjy 53 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உயிரிழக்கும் காட்டு யானைகள்

Share

இலங்கையில் உயிரிழக்கும் காட்டு யானைகள்

2023 அக்டோபர் மாதம் வரை இலங்கையில் மொத்தம் 399 யானைகள் இறந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை யானை-மனித மோதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இயற்கை காரணங்களினாலும் கணிசமான எண்ணிக்கையிலான காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக திணைக்களத்தின் விளம்பர அதிகாரி ஹாசினி சரத்சந்திர தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 74 யானைகளும், மின்சாரம் தாக்கி 47 யானைகளும், ஹக்கபட்டாசு பாவனையால் 39 யானைகளும், விசவாயு தாக்கி 3 யானைகளும், தொடருந்து விபத்தில் 19 யானைகளும், வீதி விபத்தில் ஒரு யானையும், விவசாய கிணற்றில் விழுந்து நான்கு யானைகளும் உயிரிழந்துள்ளன.

இதுமட்டுமன்றி மேலும் பல்வேறு சம்பவங்கள் காரணமாக 15 யானைகள் இறந்துள்ளன. மீதமுள்ள இறப்புகள் முதுமை மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற இயற்கை காரணங்களால் நிகழ்ந்துள்ளது.

2022 ஆம் ஆண்டிலேயே யானைகளின் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ள ஆண்டாகும், அந்த ஆண்டில் 439 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, 2022 உடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் இந்த ஆண்டில் யானை மரணங்கள் அதிகளவில் பதிவாகும் வாய்ப்புக்கள் அதிகம் என ஹாசினி சரத்சந்திர கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...