23 6545f142b25c4
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் ரிஷி சுனக்

Share

பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் ரிஷி சுனக்

பிரித்தானியாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை சீர்குலைக்க வேண்டாம் என பாலஸ்தீன ஆதரவு மக்களுக்கு பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்றை முன்னெடுப்பது ஆத்திரமூட்டும் செயல் மட்டுமின்றி அவமரியாதை செய்வதாகும் என ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நினைவேந்தல் நிகழ்வுகள் கண்டிப்பாக எந்த பாதிப்பும் இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கான நினைவேந்தல்களை காசா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பேரணி சீர்குலைக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

வரும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ராயல் ஆல்பர்ட் மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுடன் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும். குறித்த நிகழ்வுகளில் பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த பிரதிந்திகள் கலந்து கொள்வார்கள்.

இந்த நிலையில், காவல்துறைக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்குமாறு பிரதமர் ரிஷி சுனக் உள்விவகார செயலாளர் சுயெல்லா பிரேவர்மனை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நினைவேந்தல் நிகழ்வுகளை சீர்குலைக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு காவல்துறை தலைவருக்கும் பிரதமர் ரிஷி சுனக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...