tamilni 41 scaled
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் 37 கிராம மக்கள் படுகொலை

Share

நைஜீரியாவில் 37 கிராம மக்கள் படுகொலை

நைஜீரியாவில் உள்ள போகோஹராம் பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதல் ஒன்றில் 37 கிராம மக்கள் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலில் போகோஹராம் இயக்கத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தையடுத்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து கிராம மக்கள் பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச்சென்றபோது பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் மேலும் 20 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து அந்நாட்டு அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டி தாக்குதல் நடந்த பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நைஜீரியாவின் வடகிழக்கு, வடமேற்கு, மத்திய பிராந்தியங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...

Israel Iran
உலகம்

ஈரான் பணியும்வரை தாக்குதல் தொடரும் – அமெரிக்காவின் அதிரடி

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்க...