tamilni 34 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் உள்நுழைய தயாராகும் இந்திய நிறுவனம்

Share

இலங்கைக்குள் உள்நுழைய தயாராகும் இந்திய நிறுவனம்

இந்தியாவின் தமிழக எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கைக்கு சிமெந்து ஏற்றுமதி செய்யும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த ஏற்றுமதி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்வி, மருத்துவம், ஹோட்டல் என்று பல்வேறு தொழில் துறைகளில் முன்னணியில் திகழும், தமிழக எஸ்.ஆர்.எம். குழுமம் தனது வர்த்தகத்தை மேலும் பல துறைகளில் விரிவுப்படுத்த தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தற்போது சிமெந்து உற்பத்தி துறையில் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்காக, 225 கோடி முதலீட்டில் எஸ்.ஆர்.எம்.பி. சிமெண்ட்ஸ் நிறுவனம் என்ற புதிய நிறுவனத்தை எஸ்.ஆர்.எம். குழுமம் ஆரம்பித்துள்ளது.
இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்தநிலையில் நவம்பர் 15 முதல் இலங்கை, மாலைத்தீவு, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு எஸ்ஆர்எம் நிறுவனம், தமது சீமெந்து ஏற்றுமதியை ஆரம்பிக்கவுள்ளது.

இந்தநிலையில் நிறுவனம் தமிழ்நாட்டில் 3 ஆலைகளையும், ஆந்திராவில் ஒரு ஆலையையும் கொண்டுள்ளது.

இந்த ஆலைகளின் ஆண்டு உற்பத்தி திறன் 4.20 இலட்சம் டன்னாகும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இதனை 1 கோடி டன்னாக அதிகரிக்க, நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...