tamilni 22 scaled
இலங்கைசெய்திகள்

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம்

Share

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம்

முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கின்றனர் எனினும், அரசு இது தொடர்பில் கவனம் கொள்ளவில்லை என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த முன்பள்ளி நிர்வாகங்கள் சிறிதளவு ஊக்குவிப்பு பணத்தினை வழங்குகிறது. சில ஆசிரியர்களுக்கு கல்வி திணைக்களம் 6000 ரூபாய் ஊக்குவிப்பு பணத்தினை வழங்குகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், குறித்த ஆசிரியர்கள் சிறப்பான கல்வி வழங்குவதிலும் தமது பொருளாதாரத்தை கொண்டு செல்வதிலும் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றார்கள் என மேலும் தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்கள் நீண்ட காலமாக இவ்வாறான நெருக்கடிகளில் இருந்து வருகின்றனர்.

அவர்கள் தமது பிரச்சினையை ஒரு அணியாக அல்லது குழுவாக பலரிடத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் காலத்தில் அவர்களுக்கு தீர்வு வழங்குவதாக அரசியல் பிரமுகர்களினால் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் பேசுவார்கள்.

ஆனால் குறித்த தேர்தல்கள் இடம்பெற்று தேர்தல் காலங்கள் முடிந்த பிறகும் அவர்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்படுவதில்லை. எனவே அரசாங்கம், அரசாங்கம் முன்பள்ளி ஆசிரியர்களின் விடையத்தில் கூடிய கவனம் எடுத்து நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...