Photo 1 44444 1
இலங்கைசெய்திகள்

மதுபானசாலைகள் திறப்பு! – வைத்திய நிபுணர்கள் கடும் அதிருப்தி

Share

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது பல தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் முதலாம் திகதி வரை அரசால் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  நேற்று முதல் மதுபானசாலைகளைத் திறக்க மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

மதுபானசாலைகள்  திறக்கப்பட்ட நேரம் முதல் மதுபானசாலைகள் வாயில்களில் மக்கள் கூட்டம் பெருந்திரளாக அலைமோதுகிறது.

இந்த நிலையில், மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் வைத்திய நிபுணர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த செயற்பாடானது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு மிகப் பெரும் இடையூறாகும்.

மதுபானசாலைகளில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. இதனால் தற்போது நாட்டில் மதுபான கொத்தணி உருவாகக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது – என வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா எஸ் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...