23 653cea60e08ea
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் அரிசியின் விலை

Share

அதிகரிக்கும் அரிசியின் விலை

அதிகரிக்கும் அரிசியின் விலைசமீபகாலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதன் காரணமாக வர்த்தக அமைச்சு வியாபாரிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இந்நிலையில், விலைக் கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“அரிசிக்கு நாம் வழங்கிய கட்டுப்பாட்டு விலையை விட அரிசி உற்பத்தியாளர்களும், அரிசி வியாபாரிகளும் செயற்படுகின்றனர்.

இதை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எதிர்காலத்தில் மாவட்டந்தோறும் சென்று தலைமை தாங்கி நானும், பணிப்பாளர்களும் கண்டிப்பாக சுற்றிவளைப்புக்களை நடத்துவோம்.

அப்படியும், அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாது போனால், அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவித்துள்ளேன்.” நளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இதேவேளை, பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அரிசியின் விலை தொடர்பில் கருத்து வெளியிட்ட அரிசி வியாபார சங்க தலைவர் டட்லி சிறிசேன, அரிசியை மறைப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நெல் விலை உயர்வினால் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...