3 1 2 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவில் இருந்து பயணிப்போர்களுக்கு 1000 டொலர் வரி வசூலிக்கும் நாடு

Share

இந்தியாவில் இருந்து பயணிப்போர்களுக்கு 1000 டொலர் வரி வசூலிக்கும் நாடு

இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் 50 நாடுகளில் இருந்தும் பயணிக்கும் மக்களிடம் 1000 டொலர் வரி வசூலிக்க இருப்பதாக எல் சல்வடோர் நாடு அறிவித்துள்ளது.

மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் வழியாக அமெரிக்காவிற்கு புலம்பெயர்வதைத் தடுப்பதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாகவே இந்த வரி வசூல் முடிவுக்கு விளக்கமளிக்கின்றனர்.

இந்தியா அல்லது 50 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஏதேனும் ஒன்றின் கடவுச்சீட்டில் பயணம் செய்பவர்களும் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எல் சால்வடாரின் துறைமுக நிர்வாகம் அக்டோபர் 20ம் திகதி அதன் இணையதளத்தில் அறிக்கை ஊடாக குறித்த தகவலை தெரிவித்துள்ளது.

மேலும், திரட்டப்படும் பணம் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் புலம்பெயர் மக்கள் மத்திய அமெரிக்கா வழியாக அமெரிக்காவிற்கு செல்வதாக கூறப்படுகிறது.

மேலும், VAT உட்பட மொத்தம் 1130 டொலர் வசூலிக்க உள்ளனர். இப்படியான மக்களால் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தின் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாகவே சிறப்பு கட்டணம் வசூலிப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா உட்பட பட்டியலிடப்பட்டுள்ள 57 நாடுகளில் இருந்து வரும் பயணிகளைப் பற்றி சால்வடோரன் அதிகாரிகளுக்கு விமான நிறுவனங்கள் தினசரி தெரிவிக்க வேண்டும்.

இதனிடையே, கொலம்பிய விமான நிறுவனம் ஏவியங்கா இந்த விவகாரம் தொடர்பில் தனது பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த விமானத்தையே பெரும்பாலான புலம்பெயர் மக்கள் நாடுவதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...