2 18 scaled
உலகம்செய்திகள்

பணியில் இருக்கும்போதே சரிந்து விழுந்த காவலர்! விசாரணையில் அதிர்ச்சி

Share

பணியில் இருக்கும்போதே சரிந்து விழுந்த காவலர்! விசாரணையில் அதிர்ச்சி

அமெரிக்காவில் காவலர் ஒருவர் வலி நிவாரணி மருந்தை அதிகளவில் உட்கொண்டதில் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பொலிஸ் சார்ஜெண்ட் ஆக பணியாற்றி வந்தவர் ரிச்சர்ட் கேலி (54).

இவர் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பிரேத பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

அதில் கெல்லி Fentanyl மற்றும் methamphetamine ஆகியவற்றை உட்கொண்டதால் உயிரிழந்ததாக தெரிய வந்தது.

இதன்மூலம் அவர் போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என உயரதிகாரி ஃபோர்ட் தெரிவித்தார். மேலும், அவரது கருத்துக்கள் மற்றும் காவல்துறை கண்டுபிடித்ததன் மூலம், கெல்லி மரணத்திற்கு முன்பு போதைப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

Fentanyl என்பது ஒரு சக்திவாய்ந்த நரம்புவழி மயக்க மருந்தாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். பின்னர் தோல் இணைப்பு மற்றும் வலி நிவாரணத்திற்கான கலவையாக இது உருவாக்கப்பட்டது. அதேபோல் Methamphetamine என்பது சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்து பொருளாகும்.

இவற்றில் Fentanylஐ அதிகளவில் எடுத்துக் கொள்வது கோகையின், ஹெராயின் போன்ற கடினமான போதைப்பொருட்களை எடுத்துக் கொள்வதற்கு சமம் ஆகும்.

கடந்த ஆண்டில், குற்றம் நடந்த இடத்தில் Fentanyl-ஐ கையாள்வதால் பல காவலர்கள் அபாயகரமான, அளவுக்கதிகமான அளவுகளை அனுபவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த மருந்துடன் தோல் தொடர்பு மட்டும் உடனடியாக அதிகப்படியான அளவை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...

Untitled
செய்திகள்இந்தியா

இந்தியாவின் மாபெரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்: 30 இலட்சம் அதிகாரிகள் களமிறக்கம்!

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், ஒவ்வொரு தனிநபரையும் கணக்கெடுக்கும் பத்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும்...