tamilni 341 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

நரேந்திர மோடியின் நல்லூர் கோவிலுக்கான விஜயம் தொடர்பில் தகவல்

Share

நரேந்திர மோடியின் நல்லூர் கோவிலுக்கான விஜயம் தொடர்பில் தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான பயணம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்களை இந்தியாவின் முன்னாள் துணை தூதர் நடராஜன் வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட போது புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளவில்லை.

இதற்கான காரணம் என்ன என்பதை நடராஜன் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தபோது நல்லூர் கோவில், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு,அவரை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.

இது தொடர்பாக நல்லூர் கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி குமாரதாச மாப்பன முதலியாருடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது.

அப்போது, கோவிலுக்குள் மேலாடை அணியாமல்தான் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே கோவில் நடை திறக்கப்படும் என்ற மரபுகளில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என நல்லூர் தேவஸ்தான அதிகாரி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் நல்லூர் முருகன் கோவிலுக்கு பிரதமர் மோடியால் செல்ல முடியவில்லை. எனினும் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

அப்போது அங்கு 98 வயதான நகுலேஸ் குருக்கள் உடனிருந்தார். தற்போது அவர் காலமாகிவிட்டார் என்று ஏ.நடராஜன் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதராக ஏ.நடராஜன், 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

இந்தநிலையில் அவர், ‘From the Village to the Global Stage’ என்ற தலைப்பில் புதிய நூல் ஒன்றை எழுதி உள்ளார்.

இந்த நூல் விரைவில் கோவையில் வெளியிடப்படவுள்ளது.

இந்த நூலில் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

Share
தொடர்புடையது
1708414885 BELLANA MEDIA 6
செய்திகள்இலங்கை

என்னைக் கொலை செய்யச் சதி செய்கிறார்கள்: சிஐடி முன்னிலையில் இன்று ஆஜராகிறார் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்...

south africa shooting 3
உலகம்செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்: கேப் டவுனில் துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் (Cape Town) நகரில் மர்மக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில்...

23 64ef14df5181f
செய்திகள்உலகம்

தாய்வான் வான்பரப்பில் சீன உளவு விமானம் ஊடுருவல்: பொறுப்பற்ற செயல் என தாய்வான் கடும் கண்டனம்!

தென் சீனக் கடலில் உள்ள தாய்வானுக்குச் சொந்தமான பிரதாஸ் தீவுகளுக்குள் (Pratas Islands) சீனாவின் உளவு...

New Project 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலம் புனரமைப்பு: இரவு பகலாகத் துரித கதியில் முன்னெடுக்கப்படும் பணிகள்!

சீரற்ற வானிலை காரணமாகச் சேதமடைந்திருந்த முல்லைத்தீவு A35 வட்டுவாகல் பாலம் மற்றும் அதனைச் சார்ந்த வீதிப்...