tamilni 334 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை..!

Share

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை..!

நாடு கடந்த தமிழீழ அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட ”இலங்கை மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகளின் துயரம்” என தலைப்பிடப்பட்ட கருத்தரங்கிற்கு தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசு அனுமதி மறுத்திருப்பதை தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை வன்மையாக கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின்னர் ஈழத் தமிழர்களது இன விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாக சர்வதேச அரங்கில் முன் நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு வலுவான அமைப்பாக இன்றுவரை நாடு கடந்த தமிழக அரசாங்கமே செயற்படுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எவ்விதமான செயற்பாடுகளையும் ஈழத்தில் செய்ய விடாது இலங்கை அரசாங்கம் பாரிய தடைகளை விதித்திருக்கின்றது. இந்த அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்ளும் நாட்டிற்குள் வர முடியாதபடி தடை உத்தரவு போட்டிருக்கின்றது.

இதற்கான பிரதான காரணம் இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியாக பல வழிகளிலும் சர்வதேச அரங்கில் பாரிய அழுத்தங்களை இன்று வரை பிரயோகிக்கின்ற ஓர் பலமான அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படுகின்றமையே காரணமாகும்.

இவ்வாறான சூழ்நிலையில் இன்று இருக்கக்கூடிய தி.மு.க தலைமையிலான தமிழக அரசு ஈழத் தமிழர்கள் விவகாரங்களில் அன்று தொடக்கம் இன்று வரை எதிராகவே தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டு வருகின்றது.

இதற்கு சான்றாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்ட யுத்தம் ஓர் உதாரணமாகும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் தமிழகத்தில் தொடரும் தொடர வேண்டும் இதற்கு எதிராக தமிழகத்தில் எந்த கட்சிகள் தடை போட்டாலும் அத் தடைகளை அவர்கள் திருப்பி பெற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் தடைகள் அனைத்தும் தமிழக தொப்புள் கொடி உறவுகளால் அனைத்து வழிகளாலும் எதிர்க்கப்படும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு மிக தெளிவாக வலியுறுத்துவதோடு மேலும் தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசின் தமிழர் விரோதச் செயல்களையும் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...