rtjy 312 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் வேலைத்திட்டம்

Share

இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் வேலைத்திட்டம்

விசா இன்றி சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் செயற்பாட்டுக்காக, அங்கிருக்கும் இலங்கையர்களின் தகவல்களை திரட்டும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் இஸ்ரேலில் இருக்கும் இலங்கை தூதரகத்தில் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்சோ உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் இலங்கை தூதரகத்துக்கு வந்து, தூதுவருடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது விசா காலம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து இஸ்ரேலில் தங்கி இருக்கும் இலங்கையர்களின் விசா அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்குமாறு குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைக்கு இஸ்ரேல் குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாகவும் விசா இனுமதிப்பத்திரம் இல்லாமல் தங்கி இருக்கும் இலங்கையர்களின் தகவல்களை கோரியதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே விசா காலம் முடிவடைந்த பின்னரும் இஸ்ரேலில் தங்கி இருக்கும் இலங்கையர்களுக்கு விவசாய பிரிவில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...