6 10 scaled
இலங்கைசெய்திகள்

கிரிந்தி ஓயாவில் அதிகரிக்கும் நீர்மட்டம்

Share

கிரிந்தி ஓயாவில் அதிகரிக்கும் நீர்மட்டம்

வெல்லவாயவிலிருந்து தனமல்வில ஊடாக லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்திற்கு பாயும் கிரிந்தி ஓயாவின் நீர்மட்டம் வெல்லவாய பிரதேசத்தில் வேகமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், கிரிந்தி ஓயாவின் இருபுறங்களிலும் உள்ள மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

மொனராகலை மாவட்டத்தின் ஊடாக பாயும் கிரிந்தி ஓயாவின் மேல் பகுதியில் கடந்த சில மணித்தியாலங்களில் கடும் மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக வெல்லவாய பிரதேசத்தில் கிரிந்தி ஓயாவின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகின்றது.

மேலும், வெல்லவாய பகுதிக்க அருகில் உள்ள தாழ்நிழப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை குறித்து மக்கள் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிந்தி ஓயா ஊடாக செல்லும் வீதிகளைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...

10 7
இலங்கைசெய்திகள்

35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று...

6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...