6 10 scaled
இலங்கைசெய்திகள்

கிரிந்தி ஓயாவில் அதிகரிக்கும் நீர்மட்டம்

Share

கிரிந்தி ஓயாவில் அதிகரிக்கும் நீர்மட்டம்

வெல்லவாயவிலிருந்து தனமல்வில ஊடாக லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்திற்கு பாயும் கிரிந்தி ஓயாவின் நீர்மட்டம் வெல்லவாய பிரதேசத்தில் வேகமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், கிரிந்தி ஓயாவின் இருபுறங்களிலும் உள்ள மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

மொனராகலை மாவட்டத்தின் ஊடாக பாயும் கிரிந்தி ஓயாவின் மேல் பகுதியில் கடந்த சில மணித்தியாலங்களில் கடும் மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக வெல்லவாய பிரதேசத்தில் கிரிந்தி ஓயாவின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகின்றது.

மேலும், வெல்லவாய பகுதிக்க அருகில் உள்ள தாழ்நிழப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை குறித்து மக்கள் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிந்தி ஓயா ஊடாக செல்லும் வீதிகளைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...