tamilni 300 scaled
உலகம்செய்திகள்

உலகை உலுக்கிய காசா சம்பவம்: ரிஷி சுனக் எச்சரிக்கை

Share

உலகை உலுக்கிய காசா சம்பவம்: ரிஷி சுனக் எச்சரிக்கை

காசா வைத்தியசாலை மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் சம்பவமானது உண்மையில் காசா பகுதியில் இருந்தே முன்னெடுக்கப்பட்டதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் உள்ள அல் அஹ்லி வைத்தியசாலையை இஸ்ரேல் தரப்பு தாக்கியதாக தொடக்கத்தில் ஹமாஸ் குற்றஞ்சாட்டியது.

ஆனால் தங்களுக்கு இதில் பங்கில்லை என இஸ்ரேல் கடுமையாக இதனை மறுத்தது.

அதுமட்டுமின்றி, ஹமாஸ் ஆதரவு இயக்கம் ஒன்றே தாக்குதலை தொடுத்துள்ளதாக இஸ்ரேல் குறிப்பிட்டது.

இந்த தாக்குதலின் தொடக்கத்தில் மொத்தம் 500 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், உண்மையான எண்ணிக்கை மிக குறைவு என்றே உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக சுனக் கூறியுள்ளார்.

இந்த நிலையிலேயே பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ரிஷி சுனக் தாக்குதல் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த பாதிப்பானது காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையால் உருவானது என்றே சுனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் படைகளுக்கு, இனி காசா அல்லது பாலஸ்தீனத்தின் எந்தவொரு பகுதியிலும் அதிகாரம் செலுத்த முடியாது என்றார்.

மேலும், காசா பகுதி அப்பாவி மக்களுக்காக கூடுதலாக 20 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி அளிக்கப்படும் எனவும், காசாவில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் சுட்டக்காட்டினார்

மேலும், மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை உக்ரைனில் புடினின் கொடூரங்களுடன் ஒப்பிட்ட ரிஷி சுனக், உக்ரைனில் புடின் தோல்வியடைவது உறுதி என குறிப்பிட்டுள்ளதுடன், ஹமாஸ் படைகளுக்கும் அதே நிலை தான் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...