mano ganesan
செய்திகள்இலங்கை

அரசின் வக்கிர புத்தியை ரோஹானின் செயல் காட்டுகிறது! – மனோ எம்.பி. குற்றச்சாட்டு

Share

பெளத்தம் பற்றி எமக்கு வகுப்பு எடுக்கும் இலங்கை அரசின் வக்கிர புத்தியை ரொஹான் ரத்வத்தையின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இதற்கு பதிலளிக்க வேண்டும் எனஎனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சில் ரோஹன் ரத்வத்த அங்கு சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து துப்பாக்கிமுனையில் மிரட்டியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தனது ருவிற்றர் பக்கத்தில் கண்டனம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேற்படி பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது பதிவில்,

“ஒரு இராஜாங்க அமைச்சர் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று, துப்பாக்கி முனையில், தமிழ் கைதிகளை முழந்தாளிட செய்துள்ளார். இதொரு பாரிய மனித உரிமை மீறிய கிரிமினல் செயல்” எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...