tamilni 280 scaled
உலகம்செய்திகள்

லண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி: இலட்சக்கணக்கில் ஒன்று திரண்ட மக்கள்

Share

லண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி: இலட்சக்கணக்கில் ஒன்று திரண்ட மக்கள்

லண்டனில் இஸ்ரேல் – ஹமாஸ் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சுமார் 100,000 மக்கள் திரண்டு பேரணியில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த பேரணியானது இன்று (21.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேரணியில் பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து முழக்கமிட்ட மக்கள், கைகளில் பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பேரழிவு தரும் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய சீன நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா
பேரழிவு தரும் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய சீன நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா

பேரணியிலிருந்த காசா பெண்ணொருவர், “பாலஸ்தீன நாட்டவரான தாம் ஒரு நாள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என ஆசைப்படுகிறேன். காசாவில் குடும்பத்தினர் உள்ளனர். பாலஸ்தீன விடுதலை தொடர்பில் தீவிர நடவடிக்கை தேவை. தற்போதைய சூழலில் பேரணி ஒன்றே தீர்வாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்த பேரணியானது, மத்திய லண்டனில் தொடங்கி பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தியோகப்பூர்வ இல்லம் முன்பு முடிவடைந்துள்ளது.

பேரணியில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் படங்கள் போர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

லண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி: இலட்சக்கணக்கில் ஒன்று திரண்ட மக்கள்

தடை செய்யப்பட்ட ஹமாஸ் குழுவினருக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றச்செயல் என குறிப்பிடப்பட்டிருந்த போதும், இந்த பேரணியானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 100,000 மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்ட போதும் அமைதியான முறையிலேயே இப்பேரணி நடைபெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...