tamilni 274 scaled
உலகம்செய்திகள்

காசாவில் 24 மணி நேரத்தில் 345 பேர் பலி

Share

காசாவில் 24 மணி நேரத்தில் 345 பேர் பலி

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 345 பேர் பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், காசாவில் உள்ள வைத்தியசாலை மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது.

வடக்கு காசாவில் உள்ள குறித்த அல்-குவாத் வைத்தியசாலையில் சுமார் 400 நோயாளிகளும் பொதுமக்கள் 12,000 ஆயிரம் பேரும் தஞ்சமடைந்து இருப்பதக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலின் கோரத் தாக்குதலால், காசாவில் வாழும் 50,000 கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக ஐநா சபை தகவல் தெரிவித்துள்ளது.

காசாவின் மக்கள் தொகையில் பாதி குழந்தைகளாக உள்ளதால், ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு 1 குழந்தை பலியாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர் தாக்குதல்களால், காசாவில் வாழும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் என்று ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐநா சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, காசாவில் உள்ள 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றன.

காசாவில் சுமார் 50,000 கர்ப்பிணிகள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் அவதியுறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் அடுத்த ஒரு மாதத்தில் 5,500 பேருக்கு பிரசவம் நடக்கும் நிலையில் இருப்பதாக தெரிகிறது. பாதுகாப்பான குழந்தை பிறப்புக்கு கேள்விக்குறி எழுவதோடு, குழந்தை வளர்ப்பும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

காசாவில் ஒட்டுமொத்தமாக 25 சதவீதமான வீடுகள் சிதைக்கப்பட்டுள்ளன. 59 மருத்துவமனைகள், 170 கல்வி நிலையங்கள், குடிநீர் மற்றும் சுகாதார நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதே உலக மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...