tamilni 262 scaled
இலங்கைசெய்திகள்

சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்துகள்

Share

சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்துகள்

சிங்களவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தவறான கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (21.10.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக சில பிக்குமார் இந்த நாட்டின் ஜனாதிபதியையும், என்னையும் குறைகூறி ஊடக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

அது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது. இந்த நாட்டில் அரசாங்கத்தின் இடத்தை சிங்கள, தமிழ், கிறிஸ்தவ அல்லது முஸ்லிம் மக்கள் யாராக இருந்தாலும் அரச இடத்தை கைப்பற்றவோ சட்டவிரோதமாக பிடிக்க முயற்சித்தாலும் கண்டிப்பாக அவர்கள் மீது ஒரே விதமாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் தற்போது பிரச்சாரம் செய்கிறார்கள், நாங்கள் சிங்களவர்கள் எங்களை எங்களுடைய இடத்திலிருந்து வெளியே போகச் சொல்கிறார்கள் என்று. அது முற்றிலும் தவறான விடயமாகும்.

தனியார் இடங்களாக இருந்தால் கண்டிப்பாக அரசாங்கம் அதில் தலையிடப் போவதில்லை. எனினும் அரசாங்க இடத்திற்குள் யார் நுழைந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மதங்களை காட்டி இதனை பிரச்சினைப்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் இது நாகரீகமான செயல் கிடையாது என செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...