tamilni 254 scaled
உலகம்செய்திகள்

பேரழிவு தரும் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய சீன நிறுவனங்களுக்கு தடை

Share

பேரழிவு தரும் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய சீன நிறுவனங்களுக்கு தடை

பாகிஸ்தானுக்கு உதவிய 3 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறி பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை பாகிஸ்தான் தயாரித்து வருவதற்கு தேவையான பொருட்களை பாகிஸ்தானுக்கு சீனாவில் உள்ள நிறுவனங்கள் வழங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இதனையடுத்து ஜெனரல் டெக்னாலஜி லிமிடெட், லுவோ லுவோ தொழில்நுட்ப வளர்ச்சி கழகம் மற்றும் சாங்சோ உடெக் கம்போசிட் ஆகிய 3 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

மேலும், பேரழிவு தரும் ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் விநியோகம் எங்கு நடந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு அதன் நட்பு நாடான சீனா பல்வேறு உதவிகளை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...