பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில், குறிப்பாக ஜிரோன்ட் பிராந்தியத்தில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அவசரகால மீட்புக் குழுவினரும் பாதுகாப்புப் படையினரும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, உலகப் புகழ்பெற்ற ‘டூர் டி பிரான்ஸ்’ சைக்கிள் பந்தயத்தின் இறுதிச் சுற்றுப் பாதை சுருக்கப்பட்டு, பாரீஸ் நகரில் நடைபெறவிருந்த இறுதி கட்டப் பந்தயம் திட்டமிடப்பட்ட 133 கிலோமீட்டரிலிருந்து 89 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.
பாதை சுருக்கப்பட்ட போதிலும், புகழ்பெற்ற சாம்ப்ஸ்-எலிசீஸ் சுற்றுகள் மற்றும் மான்ட்மார்ட்ரே மலைப் பகுதி வழியிலான பந்தயப் பாதையில் சவாரி தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பந்தயத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய காவலர்கள் காட்டுத்தீ மீட்புப் பணிகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதால், போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் சுமையைக் குறைக்கும் வகையில் பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் இந்தக் கடுமையான காட்டுத்தீ காரணமாக இதுவரை 2,67,000-இற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
போர்டோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான தொடருந்து மற்றும் சாலைப் பயணங்களைத் தவிர்க்குமாறு பிரெஞ்சு அரசு பொதுமக்களை எச்சரித்துள்ளது.

