Spanish citizenship 4 Migrants
உலகம்

சட்டவிரோதமாக நுழைந்த அகதிகள் – 43 பேர் பலி.

Share

ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் கடந்த 24 மணி நேரத்தில் மொராக்கோவிலிருந்து சுமார் 60,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாகவும் அவர்களில் குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஸ்பெயினின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினின் மற்றொரு தனித்தீவான மெலிலாவை அடைய முயற்சிக்கும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த வருகை அதிகரித்துள்ளது.

மேலும், அந்த நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த நிலைமையை ஒரு “தாக்குதல்” என்று விவரித்துள்ளதுடன் அனைத்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோரும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் சட்டவிரோதமாக நுழைந்தவர்களைத் திருப்பி அனுப்பும் திட்டங்களுக்கு மொராக்கோ அதிகாரிகள் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் சட்டவிரோதமாக இப்பகுதிக்குள் நுழைந்தவர்களில் குறைந்தது 7,000 பேர் சிறார்கள் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
car dubai
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் – இலங்கைக்கு கிடைத்தது யோகம்!

  ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, இலங்கை ஊடாக புதிய சரக்கு...

Meta Company
உலகம்

மெட்டாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று !

இன்றைய தினம், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) மீது, சிறார்களின்...

donalt drump
உலகம்

ஓமானை கடுமையாக எச்சரித்த அமெரிக்க அதிபர்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஓமன் தலையிட்டால்,...

antonello da messina
உலகம்

இத்தாலியில் திருடப்பட்ட பலநூறு கோடி ரூபா பெறுமதியான ஓவியங்கள்!

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் புகழ்பெற்ற...