Attack Ship
உலகம்

ஈரான் எல்லைக்குள் தாக்கப்பட்ட மொசாம்பிக் கப்பல்.

Share

மொசாம்பிக் நாட்டுக் கொடியுடன் ஈரான் கடற்பரப்பிற்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான சரக்குக் கப்பலில் இருந்த 28 இந்தியப் பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

‘திஷா’ என்ற குறித்த மசகு எண்ணெய் கப்பல் ஈரானிய கடற்பகுதிக்குள் நுழைந்தபோது, எதிரிப் படைகளால் தாக்குதலுக்கு உள்ளானது. உடனடியாக அந்த கப்பலில் இருந்து ஆபத்து குறித்த அவசர உதவிச் செய்தி அனுப்பப்பட்டவுடன், ஈரானிய கடல்சார் மற்றும் மீட்பு அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

குறித்த, கப்பலில் இருந்த 28 இந்தியர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக இந்தியாவிற்கான ஈரான் தூதுவர் முகமது ஃபதாலி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் வெளிநாட்டு கடற்படைகளின் தலையீடு குறித்து எச்சரித்துள்ள அவர், பிராந்தியத்திற்கு வெளியே உள்ள ராணுவப் படைகளின் வருகை இப்பகுதியில் அமைதியை ஏற்படுத்தாது என்றும், மாறாக பதற்றத்தையும் சீரற்ற சூழலையுமே அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
car dubai
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் – இலங்கைக்கு கிடைத்தது யோகம்!

  ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, இலங்கை ஊடாக புதிய சரக்கு...

Meta Company
உலகம்

மெட்டாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று !

இன்றைய தினம், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) மீது, சிறார்களின்...

donalt drump
உலகம்

ஓமானை கடுமையாக எச்சரித்த அமெரிக்க அதிபர்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஓமன் தலையிட்டால்,...

antonello da messina
உலகம்

இத்தாலியில் திருடப்பட்ட பலநூறு கோடி ரூபா பெறுமதியான ஓவியங்கள்!

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் புகழ்பெற்ற...