இன்று இடம்பெறவுள்ள LPL போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.
இன்றைய போட்டிகள் கொழும்பில் உள்ள SSC மைதானத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. சர் கேரி சோபர்ஸ், இலங்கை கிரிக்கெட்டுடன் மிகவும் சிறப்பான மற்றும் நீண்டகாலத் தொடர்பைக் கொண்டிருந்த ஒரு மாபெரும் மனிதர் என கூறப்பட்டுள்ளது.
மேலும், 1980-களின் முற்பகுதியில், அவர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பதுடன், 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு வழிகாட்டியாகவும் விளங்கியுள்ளார்.

