ஆர்ஜன்டீனா அணி எகிப்திய அணிக்கு எதிராக பெற்ற மூன்றாவது கோல் சரித்திரக் கோலாக மாறியுள்ளது.
எதனால் இந்த கோல் இத்தனை சிறப்பினை பெறுகின்றது?
ஆம்,கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் 3000 ஆவது கோலாக இது பதிவாகி உள்ளமையே இந்த சிறப்பிற்கு காரணம்.
இதன்படி ஃபெர்னாண்டஸ் பெற்ற கோல், கால்பந்தாட்ட செம்பியன்சிப் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3,000வது கோலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
அதேநேரம் ஆட்டத்தில் 72 வது நிமிடங்கள் வரை எந்த கோலையும் பெறாத ஆர்ஜன்டீனா அணி ஆட்டம் நிறைவு பெற 11 நிமிடங்கள் இருந்தபோதும், மேலதிக நேரத்திலும் பெற்ற மூன்று கோல்கள் அந்த அணியின் வரலாற்றில் முக்கிய கோல்களாக மாறியுள்ளன.
கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் அர்ஜென்டீனா அணி 2 கோல்கள் பின்தங்கியிருந்த நிலையில் மீண்டு வந்து வெற்றி பெறுவதுவும் முதல் முறையாக பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் ஆர்ஜன்டீனாவின் சிறப்பாட்டக்காரர் மெஸ்ஸி இன்றைய வெற்றியின் பின்னர் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் விட்டு வெற்றியை கொண்டாடினார்.
மேலும், இன்றைய போட்டியில் ஒரு கோலை பெற்ற நிலையில், இந்தத் தொடரில் எட்டு கோல்களுடன் தங்கப் பாதணி விருதிற்கான போட்டியில் மீண்டும் மெஸ்ஸி முன்னிலை பெறுகிறார்.
அது மாத்திரம் அல்லாமல் இந்த சாதனை வரலாற்றில் இதுவரை 21 கோல்களை பெற்று தொடர்ந்தும் மெஸ்ஸி முன்னிலைப் பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்ததாக பிரான்ஸ் அணியின் கெலியன் எம்பாபே 19 கோல்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
போர்த்துக்கலின் ரொனால்டோ 15 கோல்களை பெற்றுள்ள அதே நேரம் இங்கிலாந்தின் ஹரி கேன் 14 கோல்களை பெற்றுள்ளார்.