Accident 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரு பாரவூர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஐவர் காயம்!

Share

மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் கோழி உரத்தை ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் புத்தளம், முந்தலம் – மங்களஎளிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என முந்தலம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் நவடன்குளத்திலிருந்து நுரைச்சோலை நோக்கி சென்ற லொறியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Accident 02

இந்த விபத்தில் இரு லொறிகளின் சாரதிகளும் மற்றும்  லொறியில் பயணித்தவர்களுமே படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பிரதேச மக்களின் உதவியுடன் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் இரு லொறிகளும் பாரியளவில் சேதமடைந்துள்ளன.

விபத்து தொடர்பில் முந்தலாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...

23 3
செய்திகள்அரசியல்இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம்: மஹிந்த ராஜபக்ச தலைமையில் முக்கிய ஆலோசனை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

22 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கைக்கான பயண அறிவுறுத்தல் மாற்றப்படவில்லை: அவுஸ்திரேலிய தூதரகம் மறுப்பு!

இலங்கை, அவுஸ்திரேலியர்களுக்கான “உயர் அவதானம் தேவைப்படும் சுற்றுலாத் தலமாக” வகைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும்...

18 6
இலங்கைஅரசியல்செய்திகள்

இலங்கையை மோதல் களமாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதாக விமல் வீரவன்ச சந்தேகம்: கொழும்பில் ஊடக சந்திப்பு!

ஈரான் போர்க்கப்பல் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கையை...