Theepan scaled
செய்திகள்அரசியல்இந்தியா

அதிபர், ஆசிரியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில்….? – இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்து

Share

நாளை 21ம் திகதி மற்றும் நாளை மறுதினம் 22ம் திகதிகளில் அதிபர் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு இன்று நடந்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய உபதலைவர் தீபன்தீலீசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசியல்வாதிகளுடனும் அரசோடு சேர்ந்து இயங்குகின்ற ஒரு சில அமைப்புகளும் சங்கங்களும், 21 ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வதென அறிவித்திருந்தாலும், அதிபர்களும், ஆசிரியர்களும் எங்கள் உரிமைக்காக பணியைப் பகிஸ்கரித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையிலே 21,22ம் திகதி பாடசாலைகள் அனைத்திற்கும் அதிபர் ஆசிரியர்கள் விடுமுறையை அறிவிக்காமல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எந்தவித அச்சமுமின்றி அனைத்து அதிபர் ஆசிரியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

பகிஸ்கரித்தால் சம்பளத்தை நிறுத்துவோமென கூறினாலும் அவற்றை சட்ட ரீதியாக செயற்படுத்த முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பகிஸ்கரிப்பு நடைபெறும் பொழுது அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக எந்த சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகிறது.

அரசாங்கம் ஆசிரியர் அதிபர்களோடு தொடர்புபடாத யாரை வைத்து பாடசாலைகளை ஆரம்பித்தாலும், அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்லாத இடத்தில் எந்த விதமான பாதிப்புக்களும் ஆசிரியர் அதிபர்களுக்கு ஏற்படப் போவதில்லை. என்பதை நாங்கள் பொறுப்புடன் கூறிக் கொள்கிறோம்.

21,22 ஆம் திகதிகளில் மாணவர்களை பாடசாலைக்கு செல்வது எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக இருக்காது.

25ஆம் திகதி நாங்களாக பாடசாலைக்கு வரும்போது, உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள். நாங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்தல் செயற்பாடுகளைச் செய்ய தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilnkaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
12879419
செய்திகள்அரசியல்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் நாளாந்தக் கொடுப்பனவு ரூ. 1,550 ஆக உயர்வு: சுகாதார மேம்பாட்டிற்கு ரூ. 31,000 மில்லியன் ஒதுக்கீடு – ஜனாதிபதி அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் கொடுப்பனவை அதிகரிப்பது மற்றும் சுகாதாரத் துறையில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...

25 690cc39f76f96
செய்திகள்இந்தியா

மாத்தறை வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் நவம்பர் 28 அன்று தெரிவு: வர்த்தமானி வெளியீடு!

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் (தலைவர்) எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி தெரிவு...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...