1636882467294
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜா – ரஞ்சித் இணையும் விக்ரம் 61

Share

இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கின்றார். அந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவிருக்கின்றார் எனவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் உள்ளிட்டப் படங்களில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இதில், கோப்ரா திரைப்பட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவடைகின்ற நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்படுகிறது.

சார்பட்டா பரம்பரை வெற்றிக்குப்பிறகு இயக்குநர் பா. ரஞ்சித் நட்சத்திரங்கள் நகர்கிறது, குதிரைவால், ரைட்டர், மாரிசெல்வராஜ் துருவ் விக்ரம் இணையும் படம் என பல படங்களையும் தயாரித்து வருகிறார்.

நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு முடிந்தவுடன் பா.ரஞ்சித் விக்ரம் 61 படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு, முதல் முறையாக பா.ரஞ்சித் இசை ஞானி இளையராஜாவுடன் இணைகிறார் என்று ததகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...